
லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களுக்கான மாணவர் மன்றமும் திருமதி பவதாரணி மதிவதனன் ஆசிரியரின் பிரியாவிடை நிகழ்வும் 12.06.2025 அன்று 9.15 மணியளவில் லிற்றில் ரெக் அக்கடமியின் கல்வி பண்பாட்டு மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த இந் நிகழ்வுக்கு இலண்டன் லிற்றில் ரெக் அக்கடமி இன் நம்பிக்கை நிதிய தலைவர் திரு. கதிரமலை நந்தகுமார் தலைமை தாங்க சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் திரு கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் திரு சி. கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திரு திருமதி யசோ நந்தகுமார் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்வுகளுடன் பவதாரணி ஆசிரியருடனான அனுபவப் பகிர்வும் இடம்பெற்றது. அத்துடன் திருமதி பவதாரணி மதிவதனன் அவர்களுக்கான சிறப்பு காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களால் பவதாரணி ஆசிரியருக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் 2019 O/L Batch மாணவர்களின் கௌரவிப்பும் இடம்பெற்றது. அத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவடைந்தன.



























