லிட்டில் எய்ட் நூலகம்

கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆங்கில வாசிப்பையும் – ஆங்கில அறிவையும் மேம்படுத்தும் நோக்குடன் லிட்டில் எய்ட் நிறுவனத்தால் ஆங்கில வாசிப்பு மற்றும் பயிற்சி புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படுகின்றன.

இதன் ஒரு கட்டமாக திருநகர் பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கான ஒரு தொகை புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

லிட்டில் எய்ட் திறன்விருத்தி மையத்தினால் அன்பளிப்பு செய்யப்படும் இந்த ஆங்கில புத்தகங்கள் நெதர்லாந்து நாட்டை மையமாக கொண்டு இயங்கிவரும் BOOK ABROAD நிறுவனத்தினால் இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாணவர்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

BOOK ABROAD நிறுவனத்தினால் இந்த அன்பளிப்பு செயற்றிட்டங்களாக சுமார் 50,000 அதிகமான புத்தகங்கள் லிட்டில் திறன் விருத்தி மையத்துக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்.“

Leave a Reply

X